ஆர்.எஸ்.எஸ் தேசிய செயற்குழு

ராஷ்ட்டிரிய ஸ்வயம்சேவக சங்கத்தின் அகில பாரத காரியகாரி மண்டல் பைடக் (ABKM) வரும் அக்டோபர் 28, 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் கர்நாடக மாநிலம் தார்வாட்டில் உள்ள ராஷ்ட்ரோத்தனா வித்யா கேந்திராவில் நடைபெற உள்ளது. இதில், ஆர்.எஸ்.எஸ் தலைவர் டாக்டர் மோகன் பகவத், தேசிய பொதுச் செயலாளர் தத்தாத்ரேயா ஹோசபளே மற்றும் அகில பாரத, க்ஷேத்ர, மாநில பொறுப்பாளர்கள் கலந்துகொள்கின்றனர். இதில், பாரதம் முழுவதிலும் இருந்து சுமார் 350 பிரதிநிதிகள் கலந்துகொள்கின்றனர். கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற அகில பாரதிய பிரதிநிதி சபாவில் எடுக்கப்பட்ட முடிவுகள், செயல் திட்டங்கள் குறித்து இக்கூட்டத்தில் ஆய்வு செய்யப்படும்’ என, ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் அகில பாரத பிரச்சார பிரமுக் சுனில் அம்பேத்கர் தெரிவித்துள்ளார்.