அதிர்ச்சியில் காங்கிரஸ்

பஞ்சாபில் காங்கிரஸ் கட்சியின் தலைவராக நவ்ஜோத்சிங் சித்துவை நியமிக்க காங்கிரஸ் தலைமை எடுத்த முடிவுக்கு அம்மாநில முதல்வர் அம்ரிந்தர் சிங், கடும் எதிர்ப்பு தெரிவித்து சோனியா காந்திக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், கட்சித் தலைமை தம் மீது விரும்பத்தகாத முடிவுகளைத் திணிக்கிறது. அடுத்த ஆண்டு பஞ்சாப்பில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள சூழலில் சித்துவை மாநில காங்கிரஸ் தலைவராக நியமனம் செய்வது, தேர்தல் முடிவுகளை பாதிக்கக்கூடும் என்று குறிப்பிட்டு உள்ளார். பஞ்சாப் முதல்வரின் கடிதம் அக்கட்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.