அண்ணாமலைக்கு ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு

தமிழக பா.ஜ.க தலைவராக அண்ணாமலைக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ளதால் ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பை மத்திய உள்துறை அமைச்சகம் வழங்கி உள்ளது. இதனையடுத்து சி.ஆர்.பி.எப் வீரர்கள் அண்ணாமலைக்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் தமிழக பா.ஜ.க அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதும், நெல்லை மேலப்பாளயத்தை சேர்ந்த ஹமீன் புரம் என்ற யூசுஃப் அலி பாபா, அண்ணாமலையின் தலையை கொய்ய வேண்டும் என்று கொலை மிரட்டல் விடுத்ததும் நினைவு கூரத்ததக்கது.