அக்னிபாத் வன்முறையாளர்கள் கைது

அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக மற்ற சில மாநிலங்களை போலவே உத்தரப் பிரதேசத்தின் மதுரா, பல்லியால், அலிகர், வாரணாசி, புத்தா நகர் என பல்வேறு இடங்களிலும் வன்முறை போராட்டங்கள் நிகழ்த்தப்பட்டன. இதனையடுத்து அதிரடி நடவடிக்கையில் இறங்கிய காவல்துறையினர் இது தொடர்பாக இதுவரை சுமார் 260 பேரை கைது செய்துள்ளனர். அவர்கள் மீது ஆறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது. மேலும், தப்பல் பகுதியில் வன்முறையைத் தூண்டி தலைமறைவாகிவிட்ட சில வன்முறையாளர்களின் புகைப்படங்களையும் அப்பகுதி காவல்துறை வெளியிட்டுள்ளது.