‘விஜயபாரதமே’ திருமண பரிசாக

‘விஜயபாரதமே’ திருமண பரிசாக

அன்புடையீர், வணக்கம்.

சென்னையில் நமது அன்பர் டாக்டரான ஒருவர் தான் கலந்து கொள்ளும் திருமணங்களில் மணமக்களுக்குப் பரிசாக (மொய்) பணமோ அல்லது பரிசுப் பொருள்களோ வழங்குவதில்லை. அதற்குப் பதிலாக அவர்களுக்கு ‘விஜயபாரதம்’ ஓராண்டு சந்தாவை பரிசாக செலுத்தி விடுகிறார். இது ஒரு நல்ல முயற்சி. நாமும் கூட திருமணப் பரிசாக நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் இது போன்று செய்யலாமே!

திருச்சியில் பிரபலமான டாக்டர் ஒருவர் தான் விஜயபாரதத்தைப் படித்த பிறகு, தனது மருத்துவமனையில் நோயாளிகள் காத்திருக்கும் அறையில் மற்ற பத்திரிகைகளுடன் விஜயபாரதத்தையும் வைத்து விடுகிறார். சமீபத்தில் அவரை நேரில் சந்தித்தபோது அவரே இதைக் கூறினார். சிலர் ஆர்வக் கோளாறினால் விஜயபாரதத்தை தெரியாமல் அங்கிருந்து வீட்டுக்கு எடுத்துச் சென்று விடுகிறார்கள் என்றும் தெரிவித்தார்.

சில வார பத்திரிகைகள் பொழுது போக்கிற்காக படிக்கக் கூடியவைகள். படித்த பிறகு பழைய பேப்பருக்கு எடைக்குப் போட வேண்டியதுதான். ஆனால் நமது சந்தாதாரர்கள் பலர் படித்த பிறகு விஜயபாரதத்தை தமது நண்பர்களுக்கு வழங்கி வருகிறார்கள். நாமும் படித்த பிறகு நமக்கு அருகாமையில் உள்ள நூலகத்தில் கொடுத்து விடலாம்.

மார்ச் மாதம் முழுவதும் விஜயபாரதம் சந்தா சேகரிப்பு இயக்கம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தாங்களும் நண்பர்கள், உறவினர்கள் ஒருவரையாவது விஜயபாரதத்திற்கு சந்தாதாரர் ஆக சேர்த்துத் தரும்படி அன்புடன் வேண்டுகிறோம்.

வாழி நலம் சூழ.

ம. வீரபாகு,  ஆசிரியர்