தமிழுக்கு இது தேசிய கௌரவம்

ந்திய நாடாளுமன்ற வளாகத்துக்குள் திருக்குறள் ஒலிப்பதைத் தமிழுக்குக் கிடைத்த தேசியப் பெருமை என்று கருதுகிறேன். திருக்குறளின் மொத்த அதிகாரங்களையும் மூளைக்குள் எழுதிக்கொண்ட 133 கண்மணிகள் இந்த நாடாளுமன்றத்துக்குள் வந்திருக்கிறார்கள்.

அதிகாரம் உள்ளவர்கள்தாம் நாடாளுமன்றத்துக்குள் நுழைய முடியும். இந்தக் குழந்தைகளும் அதிகாரத்தோடுதான் நாடாளுமன்றத்துக்குள் வந்திருக்கிறார்கள், திருக்குறளின் 133 அதிகாரங்களோடு.

திருக்குறள் தமிழ்மொழியில்தான் எழுதப்பட்டது என்றபோதிலும் ஒவ்வொரு இந்தியனுக்கும் உரிமையானது; ஒட்டுமொத்த மனிதகுலத்துக்கும் பொதுவானது.

திருக்குறள் மனிதனைப் பேசுகிறது. ஆனால் அது தமிழன் – வங்காளி – மலையாளி – மராட்டியன் – தெலுங்கன் என்று இனம் பிரித்துப் பேசவில்லை.

இன்று இந்த உலகத்தின் தலைக்குமேல் ஆடிக்கொண்டிருக்கிற வன்முறை என்ற கத்திக்கு எதிராக மனித மனங்களைச் சலவை செகிறது திருக்குறள். மனித குலத்தின் பெருஞ்செதியாக அது அன்பையே ஓதுகிறது. திருக்குறள்தான் டால்ஸ்டா என்ற ரஷ்யப் படைப்பாளிக்கு அகிம்சையைக் கற்றுத் தந்திருக்கிறது. அகிம்சை என்ற தத்துவத்தை ஜெர்மனியில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறளில் இருந்துதான் நான் பெற்றுக்கொண்டேன்” இது லியோ டால்ஸ்டாயின் ஒப்புதல் வாக்குமூலம்.

page-9_pic_1

புவி வெப்பமாதல்தான் அகில உலகமும் எதிர்கொள்ளவேண்டிய உடனடிப் பெரும் பிரச்சனை. இன்னும் 3 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகமானால் 33 விழுக்காடு விலங்கினங்கள் பூமியிலிருந்தே காணாமல் போவிடும். இப்போது பாரீஸில் நிகழ்ந்த பருவநிலைமாற்ற உச்சி மாநாட்டில் எட்டப்பட்டிருக்கிற முடிவுதான் நிகழ்கால நிமிடத் தேவை. தாமதப்படுத்த வேண்டியவற்றைத் தாமதப்படுத்து; தாமதிக்கக் கூடாதவற்றைத் தாமதப்படுத்தாதே”

இதைத்தான் – தூங்குக தூங்கிச் செயற்பால தூங்கற்க தூங்காது செயும் வினை” என்று ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நிர்வாக மேலாண்மைத் தத்துவமாக வள்ளுவம் உலகுக்கு வழங்கியது.

இந்த மாத மழையில் எங்கள் சென்னை மூழ்கிவிட்டது. மழைத் தண்ணீர் மனிதர்களைக் குடித்துவிட்டுப் போவிட்டது. எங்கள் வானம் பகலைத் தொலைத்துவிட்டது. இது ஒரு நூற்றாண்டின் பேரழிவு. இந்தத் துயரம் பற்றியும் அதிலிருந்து மீள்வது பற்றியும் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட குறள் எங்களுக்கு வழிகாட்டுகிறது.

கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்பா மற்றாங்கே எடுப்பதூஉம் எல்லாம் மழை” என்பது குறள்.

கெடுப்பதும் மழைதான்; கெட்டவர்களை மீண்டும் வாழவைப்பதும் மழைதான்” என்று வள்ளுவர் சோல்லியிருக்கிறார். எங்களை அழித்த மழையின் மிச்சம் எங்கள் பூமிக்கடியில் சேமிப்பாகக் கிடக்கிறது. தமிழ்நாட்டு விவசாயிகள் அந்த நீரைப் பயன்படுத்தி மூன்று மடங்கு மகசூல் காண்பார்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. இழப்பை அப்படித்தான் நாங்கள் ஈடு செயப்போகிறோம். இந்த மழைச் சேதத்தை ஈடு செவதற்கு மத்திய மாநில அரசுகள் விவசாயிகளுக்குக் கைகொடுக்க வேண்டும். உழைப்பதற்கு அவர்கள் தயாராக இருக்கிறார்கள்; பிழைப்பதற்கு நாம்தான் வழிசெய வேண்டும்.

ஆதாரங்களை அழித்த அதே மழை நீரைப் பயன்படுத்தி அவர்கள் ஆதாயங்களை ஈட்டுவார்கள். வள்ளுவர் எங்களுக்கு வழங்கிய வாழ்க்கைப்பாடம் இதுதான். இப்படி வாழ்வுக்கு வழிகாட்டுவதால்தான் திருக்குறள் இன்னும் உயிர்ப்போடு விளங்குகிறது.

நாடாளுமன்ற வளாகத்துக்குள் திருவள்ளுவர் கொண்டாடப்படுவதில் இமயம் குமரிக்கு வந்து குடைபிடிப்பதா மகிழ்கிறோம்.

(புகழ்பெற்ற திரைப்பட பாடலாசிரியர் வைரமுத்து டிசம்பர் 17 டில்லி நாடாளுமன்ற திருக்குறள் நிகழ்ச்சியில் பேசியதிலிலிருந்து)