மழை நீர் சேகரிப்புக்கு மேலும் ஒரு முயற்சி

ஊராட்சிகள் வாயிலாக பயன்படாத திறந்தவெளி கிணறு மற்றும் ஆழ்துளை கிணறுகள் குறித்த கணக்கெடுப்பு நடந்து வருகிறது.தனியார் அரசுத் துறைகளுக்கு சொந்தமான ஆழ்துளை கிணறுகளை மூடி வைக்க மாவட்ட நிர்வாகங்கள் வாயிலாக அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.பயன்படாத ஆழ்துளை கிணறுகளை முழுவதும் மூடாமல் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பாக மாற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.அரசு மற்றும் தனியாரின் பயன்படாத ஆழ்துளை கிணறுகளை கணக்கிட்டு 100 நாள் வேலை திட்டத்தில் இப்பணிகளை முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.