அயோத்தி தீர்ப்பு பற்றி பிரதமர் மோடி கருத்து

அயோத்தி வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பை, யாருடைய வெற்றி, தோல்வியாக பார்க்கக்கூடாது. நீதி பரிபாலனத்தின் முக்கியத்துவத்தை இந்த தீர்ப்பு உணர்த்தியுள்ளது. நாட்டு மக்கள் அமைதி, நல்லிணக்கம், ஒற்றுமையை வெளிப்படுத்த வேண்டும். அனைத்து தரப்பினரும் ஏற்கும் வகையிலான தீர்ப்பை உச்சநீதிமன்றம் அளித்துள்ளதாக கருதுகிறேன். ராம் பக்தியோ, ரஹீம் பக்தியோ, பக்தியை வலுப்படுத்த வேண்டிய நேரம் இது. எந்த ஒரு பிரச்னைக்கும் நீதித்துறை மூலம் ஏற்கத்தக்க வகையில் தீர்வு காண முடியும் என்பது நிரூபணம் ஆகியுள்ளது