<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	
	>
<channel>
	<title>
	Comments on: பாராளுமன்ற தேர்தல் – தமிழகத்தில் செய்ததும் – செய்ய தவறியதும்	</title>
	<atom:link href="https://vijayabharatham.org/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://vijayabharatham.org/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%ae%be%e0%ae%b3%e0%af%81%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1-%e0%ae%a4%e0%af%87%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf/</link>
	<description>தேசிய வார இதழ்</description>
	<lastBuildDate>Tue, 02 Jul 2019 22:44:52 +0000</lastBuildDate>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	
	<item>
		<title>
		By: S A SRINIVASA SARMA		</title>
		<link>https://vijayabharatham.org/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%ae%be%e0%ae%b3%e0%af%81%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1-%e0%ae%a4%e0%af%87%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf/#comment-6204</link>
		<dc:creator><![CDATA[S A SRINIVASA SARMA]]></dc:creator>
		<pubDate>Tue, 02 Jul 2019 22:44:52 +0000</pubDate>
		<guid isPermaLink="false">https://vijayabharatham.org/?p=5269#comment-6204</guid>
					<description><![CDATA[நாடு முழுவதும் ஒரே குடும்ப அட்டை திட்டத்தை அடுத்த ஆண்டு ஜுன் மாதத்திற்குள் செயல்பாட்டிற்கு கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டுவருகிறது என்று ராம் விலாஸ் பாஸ்வான் கூறியவுடன், திராவிடக்கும்பல் உடனே கூட்டுப் பிரார்த்தனை போல், கூட்டுத் தொழில் செய்யும் மத வியாபாரிகள் போல், கூட்டுக் கொள்ளை அடித்ததை மறந்து, தங்கள் குடும்பத்தை கூட்டாக வைத்துக் கொண்டு, கூட்டம் போடுகிறார்கள். 
பணம் தந்து வாக்காளர்கள் ஏமாற்றிய டி டி வி தினகரன் அவர்கள், “ ஒரே நாடு; ஒரே ரேஷன்’ திட்டத்தால்  ஏழை, எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்” என்று கூறியுள்ளார். “ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு என்பது மாநில சுயாட்சிக்கு எதிரானது” என்று திருட்டு முட்டாள் கழகத்தின் தலைவர் ஸ்டாலின் அவர்கள் மொழிந்துள்ளார். ஓசியிலே பிரியாணி சாப்பிடும் கூட்டத்தின் தலைவர் ஒருவர்(யாரு என்று அனைவருக்கும் தெரிந்து இருக்கும்) ரொம்ப யோசித்தால், திராவிடக் கட்சி அழிந்து விடும். நம்மை யோசிக்கவே விடமாட்டார்கள். உடனே ஒரு போராட்டம் நடத்தி, மக்களை பிரியாணிக்கு அழைத்து , ஒரு கூட்டம் போடுவார்கள். வீரமணி என்ற திராவிடக் கட்சியின் தலைவர் கூறிய பொருளாதார பேருரை- “ஒரே நாடு, ஒரே மதம், ஒரே கலாசாரம், ஒரே மொழி, ஒரே தேர்தல் என்ற திட்டமிட்ட வரிசையில், ஒரே ரேஷன் கார்டு என்பதை மத்திய அரசு அறிவித்திருக்கிறது. இது கூட்டாட்சி தத்துவத்தை ஒழித்து, மாநில உரிமைகளை பறித்து, ஒற்றை ஆட்சி முறைக்கு வழிவகுக்கும் ஒரு மறைமுக ஏற்பாடாகும்.”
வீரமணியின் கவலைகளை நாம் அறிந்து கொள்ள வேண்டும். இவர் ஒரு குடும்ப ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. தி மு க என்ற கட்சியை திரு மு கருணாநிதி என்ற குடும்பக் கட்சியாக செய்த பொது , இந்த மாபெரும் பொருளாதார வல்லுநர், அரசியல் தீர்க்கதர்சி, ஒரு கட்சி, ஒரு குடும்பம் என்ற தத்துவத்தை எதிர்க்க வில்லை. 
நாம் வீரமணியின் சரித்திரத்தைப் பார்ப்போம்:
திராவிட கழக தலைவர் கி.வீரமணி, தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பேட்டி அளித்திருந்தார். அதில் செய்தியாளர் எழுப்பிய 
கேள்விக்கு வைகோ, தங்களது அமைப்பின் சொத்துக்களை காப்பாற்றி கொடுத்தது உண்மைதான் என்று பகிரங்கமாக ஒப்புக்கொண்டார். வாஜ்பாயின் உதவியை நாடி பெரியாரின் சொத்துக்களை காப்பாற்றிக் கொடுத்தேன் என்றும் இதனை வீரமணிமறந்துவிடக்கூடாது என்றும் வைகோ ஒரு பேட்டியில் கூறியது பற்றி கி.வீரமணியிடம் கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த கி.வீரமணி, டெல்லியில் புதிய பெரியார் மையம் அமைக்கப்பட்டது பற்றி வைகோ குறிப்பிட்டிருக்கலாம். டெல்லியில் பெரியார் மையம் இடித்தபோது இது பற்றி வைகோவிடம் கூறினேன். அப்போது வி.பி.சிங் மருத்துவமனையில் இருந்தார். அதனால் 
வைகோவிடம் கூறினேன்.
இது குறித்து வி.பி.சிங்கிடம் சொன்னபோது, அவர் உடனேயே வாஜ்பாயை பார்க்க ஏற்பாடு செய்து கொடுத்தார். வாஜ்பாயை பார்க்க சென்றபோது அந்த குழுவில் வைகோவும் இருந்தார். அவரோட பங்களிப்பால் இன்னொரு பெரியார் மையம் உருவானது. அதனால் வைகோ சொல்லியிருக்கலாம். தவறில்லை என்றார். 
வாஜ்பாய்க்கு இரங்கல் தெரிவித்தபோது இது குறித்து தான் கூறியுள்ளதாகவும், தவறான நிலை எடுத்தார்கள் என்று கூறிய நிலையில் டெல்லி கவர்னரை வரச்சொல்லி, எந்த இடம் வேண்டுமோ அந்த இடத்தைக் கொடுத்து புதிய பெரியார் மையம் அமைக்கப்பட்டது என்று கி.வீரமணி கூறினார்.
கூகுளே தேடினேன், எனக்கு கிடைத்த ஒரு தகவல் :
பெரியாரின் சொத்துகளை அவசர அவசரமாக விற்பனை செய்யும் முயற்சிகளில் தி.க. தலைவர் கி.வீரமணி இறங்கியிருப்பதாகத் தெரிகிறது. இது பற்றி பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி ‘குமுதம் ரிப்போர்ட்டர்’ (ஜூலை 22) இதழுக்கு பேட்டி அளித்துள்ளார். பேட்டியிலிருந்து:
 
“குடிஅரசு இதழில் வெளியான பெரியாரின் கருத்துரைகளை 28தொகுதிகள்  கொண்ட தொகுப்பாக வெளியிட நாங்கள் முயற்சி எடுத்துக் கொண்டோம். அதற்கு எதிராக திராவிடர் கழகத் தலைவர் வீரமணி கடந்த ஆகஸ்ட் 2008 இல் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து இடைக்காலத் தடை பெற்றார். அது தொடர்பாக நடந்த மேல்முறையீட்டின்போது, ‘பெரியாரின் அறிவுசார் சொத்துரிமை தங்களுக்குச் சொந்தமானது!’ என்று திராவிடர் கழகத்தின் சார்பில் நீதிமன்றத்தில் வைக்கப்பட்ட வாதத்தை உயர்நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச் ஏற்கவில்லை.
 
‘உங்களிடம் உரிமையிருப்பதற்கு எந்த ஆவணம் இருக்கிறது? அந்த ஆவணத்தைக் காட்டினால் மட்டுமே நீங்கள் சொல்வதை நீதிமன்றம் ஏற்கும். அப்படி ஆவணங்கள் எதுவும் இல்லாத காரணத்தால் தாமாகவே அது மக்கள் சொத்தாக மாறி விடுகிறது’ என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
 
இந்தத் தீர்ப்புதான் பெரியாரின் சொத்துகள் தொடர்பாக ஒரு தெளிவை எங்களுக்கு ஏற்படுத்தியது. திராவிடர் கழகத்தில் நீண்ட காலம் தன்னை இணைத்துக் கொண்டிருந்தவரும், அதற்காக பல வழக்குகளில் வாதிட்டவருமான வழக்குரைஞர் துரைசாமி, பெரியாரின் எந்தச் சொத்துப் பரிமாற்றமும் அறக்கட்டளைக்கு ஆவணங்கள் வழியாகச் செய்யப்படவேயில்லை என்பதை எங்களிடம் உறுதிப்படுத்தினார். கடந்த ஜூன் 11 ஆம் தேதி சென்னை பிரஸ்கிளப்பில் ‘பெரியார் கருத்துரைகள்’ புத்தக வெளியீட்டின்போது, ‘பெரியாரின் அசையாச் சொத்துகளுக்கான உரிமை யாருக்கு என்பதற்கான பதிவு செய்யப்பட்ட ஆவணங்கள் எதுவும் இல்லாததால், அவை தாமாகவே மக்கள் சொத்தாக மாறிவிடுகின்றன என்பது தான் தற்போதுள்ள சட்ட பூர்வமான நிலை’ என்று அவர் பேசினார்.
 
பெரியாரின் மறைவு வரையில் தனது சொத்துக்களை யாருக்கும் அவர் எழுதி வைக்கவில்லை. பெரியாரின் பெயரில்தான் அவை இருந்தன. சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தைப் பெரியார் பதிவு செய்தாரே தவிர, தனது சொத்துகளை சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்துக்காக அவர் எழுதித் தரவில்லை.
 
எனவே, பெரியாரின் சொத்துகளுக்கு  அந்த அறக்கட்டளை உரிமை கோர முடியாது. சட்டப்படி அதுவும் மக்கள் சொத்தாகத்தான் கருதப்படும். அதனை உடனே அரசு அறிவிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி நாங்கள் போராடுவோம் என்று எங்கள் ‘பெரியார் முழக்கம்’ இதழில் குறிப்பிட்டிருந்தோம்.
 
இதுபற்றி அவசர அவசரமாக விவாதித்ததாகக் கூறப்படும் தி.க. தலைமை, பெரியார் பெயரிலிருக்கும் சொத்துகளை விரைவில் விற்றுவிடுவதற்காக ஒரு குழுவை கடந்த 7 ஆம் தேதி ஏற்படுத்தியிருப்பதாக உறுதி செய்யப்படாத சில தகவல்கள் எங்களுக்குக் கிடைத்துள்ளன.
 
சென்ற மாதம் சென்னை செனாய் நகரில் ஒரு சொத்தும், கடந்த 9ஆம் தேதி திருவிடைமருதூரில் இரு சொத்துகளும் விற்கப்பட்டுள்ளதாக தி.க. தரப்பிலிருந்தே எங்களுக்குச் செய்திகள் வந்துள்ளன. மக்கள் சொத்தைக் கொள்ளையடிக்கும் ஒரு முயற்சியாகவே இதைக் கருத வேண்டியிருக்கிறது. இது உண்மையாக இருக்குமேயானால் அதனைத் தடுப்பதற்காக நடவடிக்கையை நிச்சயம் எடுப்போம்.
 
பெரியாரின் சொத்துகள் மக்கள் சொத்தாக மாற்றப் பட்டு, அரசின் கண்காணிப்பில் அது நிர்வகிக்கப்பட வேண்டும் என்று தமிழக அரசை நாங்கள் வலியுறுத்தும் விதமான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளவிருக்கிறோம்.
 
சென்னையிலுள்ள பெரியார் திடல், ஈரோட்டிலுள்ள பெரியார் மன்றம்,அதனைச் சுற்றியுள்ள வணிக வளாகம், பத்தாயிரம் சதுர அடியிலான ஒரு மஞ்சள் மண்டி, பல வீடுகள், மணியம்மை ஸ்டோர் என்ற பெயரில் ஒரு கடை என பெரியாருக்குச் சொந்தமான பல சொத்துகள் ஈரோட்டில் உள்ளன.  திருச்சி நகரத்தில் 3 ஏக்கர் பரப்பில் பெரியார் மாளிகை, திருச்சி கே.கே. நகர் பகுதியில் 17 ஏக்கர் பரப்பளவு கொண்ட பெரியார் கல்வி வளாகம் ஆகியவை உள்ளன. சேலம் ஏற்காட்டில் ஏரிக்கருகே ஒரு வீடு மற்றும் சில கடைகள் பெரியாரின் சொத்துகளாக உள்ளன. தஞ்சையில் பெரியார் இல்லம் உள்ளிட்ட பல சொத்துகள் உள்ளன.
 
இவை மேம்போக்காக எங்களுக்குத் தெரிந்த பெரியாரது சொத்துகள். அவரது சொத்துகளில் நாங்கள் அக்கறை காட்டாத காரணத்தால் அது பற்றிய முழு விவரங்கள் எங்களிடம் இல்லை. அவற்றைத் திரட்டிக் கொண்டுள்ளோம். அவை மக்கள் சொத்து. மக்களுக்குச் சேர வேண்டும் என்பதால் நாங்கள் அவற்றில் கவனம் செலுத்துகிறோம். அந்தச் சொத்துக்களைக் காப்பாற்ற முறையான நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்க வேண்டும்.  அதை வலியுறுத்தி நாங்கள் நீதிமன்றம் செல்லப் போகிறோம்” என்றார் கொளத்தூர் மணி.
 
இது பற்றி தி.க. தரப்பு என்ன சொல்கிறது என்பதை அறிய அதன் தலைவர் கி. வீரமணியைத் தொடர்பு கொள்ள முயன்றோம். நம்மிடம் பேசிய வீரமணியின் உதவியாளர் ‘விடுதலை’ ஸ்ரீதர், “அவர் சிங்கப்பூர் சென்றிருக்கிறார். திரும்பி வர இரண்டு வாரங்கள் ஆகும். இந்த விஷயத்தில் அவர் வந்து தான் கருத்துச் சொல்ல வேண்டும்” என்றார்.
 
தி.க. பொதுச்செயலாளர் கலி. பூங்குன்றனிடம் கேட்ட போது அவர், “பேட்டி எல்லாம் தர முடியாது. தலைவர் ஊரில் இல்லை. அவர் வந்துதான் கருத்துச் சொல்ல வேண்டும்” என்றார். ‘பெரியார் சொத்துகள் குறித்து பெரியார் திராவிடர் கழகம் வழக்குத் தொடுக்க இருக்கிறதாமே?’ என்று நாம் கேட்டபோது, “வழக்கு தொடுத்தால் அது நீதிமன்றத்துக்குத்தான் வரும். அங்கே நாங்கள் பார்த்துக் கொள்வோம்!” என முடித்துக் கொண்டார் அவர்.
இந்தப் பெரிய வீரமணிதான் தமிழ்நாட்டைப் பற்றி கவலைப்படுகிறார். ஐம்பது வருடமாக திராவிடம் பேசி, இவர்கள் பசியைப் போக்க வில்லை. இவர்கள் புசிக்க ஆரம்பித்து விட்டதால், தமிழ்நாடு மாநிலத்தில் ஒன்றும் நடக்கவில்லை. இப்பொழுது இவர்களின் முகத்திரை கிழிந்து கொண்டு வருதிறது. இவர் குடும்பக் கட்சியுடன் கைகோர்த்து அரசியல் பேசுவது ஏன் இன்று இப்பொழுது தெரிகிறது. ஒரு கட்சிதான் ஆட்சி செய்ய வேண்டும். ஒரு குடும்பம்தான் ஆள வேண்டும். ஆனால் ஒரு கார்டு கூடாது, ஒரு ஆதார் கார்டு இருக்கக் கூடாது. இந்து மக்கள் ஒன்றாகக் இருக்கக் கூடாது. இந்துக்கள் ஒன்றாகி விட்டால், இவர்கள் சமுக நீதி வியாபாரம் ஒழிந்து விடும். இவர்களின் மத மாற்றும் தொழில் நின்று விடும். நாம் விழித்து இருந்தால், இந்த கும்பல் ஒழிந்து விடும். அதற்கு ஒரு குடும்பம் ஒரு கார்டு, ஒரு இந்தியன் ஒரே ஆதார் கார்டு, ஒரு வாக்காளர். ஒரே அட்டை, ஒரு வீடு, ஒரு காஸ் கார்டு. இதெல்லாம் நடை முறைக்கு வந்தால்தான், ஒரு குடும்பம், ஒரே ஆட்சி அழியும். நாடு வளம்பெறும். இல்லை என்றால் நாம் அழிவோம், இந்த கும்பலும், குடும்பங்களும் மட்டும் வளரும்.]]></description>
			<content:encoded><![CDATA[<p>நாடு முழுவதும் ஒரே குடும்ப அட்டை திட்டத்தை அடுத்த ஆண்டு ஜுன் மாதத்திற்குள் செயல்பாட்டிற்கு கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டுவருகிறது என்று ராம் விலாஸ் பாஸ்வான் கூறியவுடன், திராவிடக்கும்பல் உடனே கூட்டுப் பிரார்த்தனை போல், கூட்டுத் தொழில் செய்யும் மத வியாபாரிகள் போல், கூட்டுக் கொள்ளை அடித்ததை மறந்து, தங்கள் குடும்பத்தை கூட்டாக வைத்துக் கொண்டு, கூட்டம் போடுகிறார்கள்.<br />
பணம் தந்து வாக்காளர்கள் ஏமாற்றிய டி டி வி தினகரன் அவர்கள், “ ஒரே நாடு; ஒரே ரேஷன்’ திட்டத்தால்  ஏழை, எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்” என்று கூறியுள்ளார். “ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு என்பது மாநில சுயாட்சிக்கு எதிரானது” என்று திருட்டு முட்டாள் கழகத்தின் தலைவர் ஸ்டாலின் அவர்கள் மொழிந்துள்ளார். ஓசியிலே பிரியாணி சாப்பிடும் கூட்டத்தின் தலைவர் ஒருவர்(யாரு என்று அனைவருக்கும் தெரிந்து இருக்கும்) ரொம்ப யோசித்தால், திராவிடக் கட்சி அழிந்து விடும். நம்மை யோசிக்கவே விடமாட்டார்கள். உடனே ஒரு போராட்டம் நடத்தி, மக்களை பிரியாணிக்கு அழைத்து , ஒரு கூட்டம் போடுவார்கள். வீரமணி என்ற திராவிடக் கட்சியின் தலைவர் கூறிய பொருளாதார பேருரை- “ஒரே நாடு, ஒரே மதம், ஒரே கலாசாரம், ஒரே மொழி, ஒரே தேர்தல் என்ற திட்டமிட்ட வரிசையில், ஒரே ரேஷன் கார்டு என்பதை மத்திய அரசு அறிவித்திருக்கிறது. இது கூட்டாட்சி தத்துவத்தை ஒழித்து, மாநில உரிமைகளை பறித்து, ஒற்றை ஆட்சி முறைக்கு வழிவகுக்கும் ஒரு மறைமுக ஏற்பாடாகும்.”<br />
வீரமணியின் கவலைகளை நாம் அறிந்து கொள்ள வேண்டும். இவர் ஒரு குடும்ப ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. தி மு க என்ற கட்சியை திரு மு கருணாநிதி என்ற குடும்பக் கட்சியாக செய்த பொது , இந்த மாபெரும் பொருளாதார வல்லுநர், அரசியல் தீர்க்கதர்சி, ஒரு கட்சி, ஒரு குடும்பம் என்ற தத்துவத்தை எதிர்க்க வில்லை.<br />
நாம் வீரமணியின் சரித்திரத்தைப் பார்ப்போம்:<br />
திராவிட கழக தலைவர் கி.வீரமணி, தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பேட்டி அளித்திருந்தார். அதில் செய்தியாளர் எழுப்பிய<br />
கேள்விக்கு வைகோ, தங்களது அமைப்பின் சொத்துக்களை காப்பாற்றி கொடுத்தது உண்மைதான் என்று பகிரங்கமாக ஒப்புக்கொண்டார். வாஜ்பாயின் உதவியை நாடி பெரியாரின் சொத்துக்களை காப்பாற்றிக் கொடுத்தேன் என்றும் இதனை வீரமணிமறந்துவிடக்கூடாது என்றும் வைகோ ஒரு பேட்டியில் கூறியது பற்றி கி.வீரமணியிடம் கேள்வி எழுப்பினார்.<br />
அதற்கு பதிலளித்த கி.வீரமணி, டெல்லியில் புதிய பெரியார் மையம் அமைக்கப்பட்டது பற்றி வைகோ குறிப்பிட்டிருக்கலாம். டெல்லியில் பெரியார் மையம் இடித்தபோது இது பற்றி வைகோவிடம் கூறினேன். அப்போது வி.பி.சிங் மருத்துவமனையில் இருந்தார். அதனால்<br />
வைகோவிடம் கூறினேன்.<br />
இது குறித்து வி.பி.சிங்கிடம் சொன்னபோது, அவர் உடனேயே வாஜ்பாயை பார்க்க ஏற்பாடு செய்து கொடுத்தார். வாஜ்பாயை பார்க்க சென்றபோது அந்த குழுவில் வைகோவும் இருந்தார். அவரோட பங்களிப்பால் இன்னொரு பெரியார் மையம் உருவானது. அதனால் வைகோ சொல்லியிருக்கலாம். தவறில்லை என்றார்.<br />
வாஜ்பாய்க்கு இரங்கல் தெரிவித்தபோது இது குறித்து தான் கூறியுள்ளதாகவும், தவறான நிலை எடுத்தார்கள் என்று கூறிய நிலையில் டெல்லி கவர்னரை வரச்சொல்லி, எந்த இடம் வேண்டுமோ அந்த இடத்தைக் கொடுத்து புதிய பெரியார் மையம் அமைக்கப்பட்டது என்று கி.வீரமணி கூறினார்.<br />
கூகுளே தேடினேன், எனக்கு கிடைத்த ஒரு தகவல் :<br />
பெரியாரின் சொத்துகளை அவசர அவசரமாக விற்பனை செய்யும் முயற்சிகளில் தி.க. தலைவர் கி.வீரமணி இறங்கியிருப்பதாகத் தெரிகிறது. இது பற்றி பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி ‘குமுதம் ரிப்போர்ட்டர்’ (ஜூலை 22) இதழுக்கு பேட்டி அளித்துள்ளார். பேட்டியிலிருந்து:</p>
<p>“குடிஅரசு இதழில் வெளியான பெரியாரின் கருத்துரைகளை 28தொகுதிகள்  கொண்ட தொகுப்பாக வெளியிட நாங்கள் முயற்சி எடுத்துக் கொண்டோம். அதற்கு எதிராக திராவிடர் கழகத் தலைவர் வீரமணி கடந்த ஆகஸ்ட் 2008 இல் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து இடைக்காலத் தடை பெற்றார். அது தொடர்பாக நடந்த மேல்முறையீட்டின்போது, ‘பெரியாரின் அறிவுசார் சொத்துரிமை தங்களுக்குச் சொந்தமானது!’ என்று திராவிடர் கழகத்தின் சார்பில் நீதிமன்றத்தில் வைக்கப்பட்ட வாதத்தை உயர்நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச் ஏற்கவில்லை.</p>
<p>‘உங்களிடம் உரிமையிருப்பதற்கு எந்த ஆவணம் இருக்கிறது? அந்த ஆவணத்தைக் காட்டினால் மட்டுமே நீங்கள் சொல்வதை நீதிமன்றம் ஏற்கும். அப்படி ஆவணங்கள் எதுவும் இல்லாத காரணத்தால் தாமாகவே அது மக்கள் சொத்தாக மாறி விடுகிறது’ என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.</p>
<p>இந்தத் தீர்ப்புதான் பெரியாரின் சொத்துகள் தொடர்பாக ஒரு தெளிவை எங்களுக்கு ஏற்படுத்தியது. திராவிடர் கழகத்தில் நீண்ட காலம் தன்னை இணைத்துக் கொண்டிருந்தவரும், அதற்காக பல வழக்குகளில் வாதிட்டவருமான வழக்குரைஞர் துரைசாமி, பெரியாரின் எந்தச் சொத்துப் பரிமாற்றமும் அறக்கட்டளைக்கு ஆவணங்கள் வழியாகச் செய்யப்படவேயில்லை என்பதை எங்களிடம் உறுதிப்படுத்தினார். கடந்த ஜூன் 11 ஆம் தேதி சென்னை பிரஸ்கிளப்பில் ‘பெரியார் கருத்துரைகள்’ புத்தக வெளியீட்டின்போது, ‘பெரியாரின் அசையாச் சொத்துகளுக்கான உரிமை யாருக்கு என்பதற்கான பதிவு செய்யப்பட்ட ஆவணங்கள் எதுவும் இல்லாததால், அவை தாமாகவே மக்கள் சொத்தாக மாறிவிடுகின்றன என்பது தான் தற்போதுள்ள சட்ட பூர்வமான நிலை’ என்று அவர் பேசினார்.</p>
<p>பெரியாரின் மறைவு வரையில் தனது சொத்துக்களை யாருக்கும் அவர் எழுதி வைக்கவில்லை. பெரியாரின் பெயரில்தான் அவை இருந்தன. சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தைப் பெரியார் பதிவு செய்தாரே தவிர, தனது சொத்துகளை சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்துக்காக அவர் எழுதித் தரவில்லை.</p>
<p>எனவே, பெரியாரின் சொத்துகளுக்கு  அந்த அறக்கட்டளை உரிமை கோர முடியாது. சட்டப்படி அதுவும் மக்கள் சொத்தாகத்தான் கருதப்படும். அதனை உடனே அரசு அறிவிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி நாங்கள் போராடுவோம் என்று எங்கள் ‘பெரியார் முழக்கம்’ இதழில் குறிப்பிட்டிருந்தோம்.</p>
<p>இதுபற்றி அவசர அவசரமாக விவாதித்ததாகக் கூறப்படும் தி.க. தலைமை, பெரியார் பெயரிலிருக்கும் சொத்துகளை விரைவில் விற்றுவிடுவதற்காக ஒரு குழுவை கடந்த 7 ஆம் தேதி ஏற்படுத்தியிருப்பதாக உறுதி செய்யப்படாத சில தகவல்கள் எங்களுக்குக் கிடைத்துள்ளன.</p>
<p>சென்ற மாதம் சென்னை செனாய் நகரில் ஒரு சொத்தும், கடந்த 9ஆம் தேதி திருவிடைமருதூரில் இரு சொத்துகளும் விற்கப்பட்டுள்ளதாக தி.க. தரப்பிலிருந்தே எங்களுக்குச் செய்திகள் வந்துள்ளன. மக்கள் சொத்தைக் கொள்ளையடிக்கும் ஒரு முயற்சியாகவே இதைக் கருத வேண்டியிருக்கிறது. இது உண்மையாக இருக்குமேயானால் அதனைத் தடுப்பதற்காக நடவடிக்கையை நிச்சயம் எடுப்போம்.</p>
<p>பெரியாரின் சொத்துகள் மக்கள் சொத்தாக மாற்றப் பட்டு, அரசின் கண்காணிப்பில் அது நிர்வகிக்கப்பட வேண்டும் என்று தமிழக அரசை நாங்கள் வலியுறுத்தும் விதமான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளவிருக்கிறோம்.</p>
<p>சென்னையிலுள்ள பெரியார் திடல், ஈரோட்டிலுள்ள பெரியார் மன்றம்,அதனைச் சுற்றியுள்ள வணிக வளாகம், பத்தாயிரம் சதுர அடியிலான ஒரு மஞ்சள் மண்டி, பல வீடுகள், மணியம்மை ஸ்டோர் என்ற பெயரில் ஒரு கடை என பெரியாருக்குச் சொந்தமான பல சொத்துகள் ஈரோட்டில் உள்ளன.  திருச்சி நகரத்தில் 3 ஏக்கர் பரப்பில் பெரியார் மாளிகை, திருச்சி கே.கே. நகர் பகுதியில் 17 ஏக்கர் பரப்பளவு கொண்ட பெரியார் கல்வி வளாகம் ஆகியவை உள்ளன. சேலம் ஏற்காட்டில் ஏரிக்கருகே ஒரு வீடு மற்றும் சில கடைகள் பெரியாரின் சொத்துகளாக உள்ளன. தஞ்சையில் பெரியார் இல்லம் உள்ளிட்ட பல சொத்துகள் உள்ளன.</p>
<p>இவை மேம்போக்காக எங்களுக்குத் தெரிந்த பெரியாரது சொத்துகள். அவரது சொத்துகளில் நாங்கள் அக்கறை காட்டாத காரணத்தால் அது பற்றிய முழு விவரங்கள் எங்களிடம் இல்லை. அவற்றைத் திரட்டிக் கொண்டுள்ளோம். அவை மக்கள் சொத்து. மக்களுக்குச் சேர வேண்டும் என்பதால் நாங்கள் அவற்றில் கவனம் செலுத்துகிறோம். அந்தச் சொத்துக்களைக் காப்பாற்ற முறையான நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்க வேண்டும்.  அதை வலியுறுத்தி நாங்கள் நீதிமன்றம் செல்லப் போகிறோம்” என்றார் கொளத்தூர் மணி.</p>
<p>இது பற்றி தி.க. தரப்பு என்ன சொல்கிறது என்பதை அறிய அதன் தலைவர் கி. வீரமணியைத் தொடர்பு கொள்ள முயன்றோம். நம்மிடம் பேசிய வீரமணியின் உதவியாளர் ‘விடுதலை’ ஸ்ரீதர், “அவர் சிங்கப்பூர் சென்றிருக்கிறார். திரும்பி வர இரண்டு வாரங்கள் ஆகும். இந்த விஷயத்தில் அவர் வந்து தான் கருத்துச் சொல்ல வேண்டும்” என்றார்.</p>
<p>தி.க. பொதுச்செயலாளர் கலி. பூங்குன்றனிடம் கேட்ட போது அவர், “பேட்டி எல்லாம் தர முடியாது. தலைவர் ஊரில் இல்லை. அவர் வந்துதான் கருத்துச் சொல்ல வேண்டும்” என்றார். ‘பெரியார் சொத்துகள் குறித்து பெரியார் திராவிடர் கழகம் வழக்குத் தொடுக்க இருக்கிறதாமே?’ என்று நாம் கேட்டபோது, “வழக்கு தொடுத்தால் அது நீதிமன்றத்துக்குத்தான் வரும். அங்கே நாங்கள் பார்த்துக் கொள்வோம்!” என முடித்துக் கொண்டார் அவர்.<br />
இந்தப் பெரிய வீரமணிதான் தமிழ்நாட்டைப் பற்றி கவலைப்படுகிறார். ஐம்பது வருடமாக திராவிடம் பேசி, இவர்கள் பசியைப் போக்க வில்லை. இவர்கள் புசிக்க ஆரம்பித்து விட்டதால், தமிழ்நாடு மாநிலத்தில் ஒன்றும் நடக்கவில்லை. இப்பொழுது இவர்களின் முகத்திரை கிழிந்து கொண்டு வருதிறது. இவர் குடும்பக் கட்சியுடன் கைகோர்த்து அரசியல் பேசுவது ஏன் இன்று இப்பொழுது தெரிகிறது. ஒரு கட்சிதான் ஆட்சி செய்ய வேண்டும். ஒரு குடும்பம்தான் ஆள வேண்டும். ஆனால் ஒரு கார்டு கூடாது, ஒரு ஆதார் கார்டு இருக்கக் கூடாது. இந்து மக்கள் ஒன்றாகக் இருக்கக் கூடாது. இந்துக்கள் ஒன்றாகி விட்டால், இவர்கள் சமுக நீதி வியாபாரம் ஒழிந்து விடும். இவர்களின் மத மாற்றும் தொழில் நின்று விடும். நாம் விழித்து இருந்தால், இந்த கும்பல் ஒழிந்து விடும். அதற்கு ஒரு குடும்பம் ஒரு கார்டு, ஒரு இந்தியன் ஒரே ஆதார் கார்டு, ஒரு வாக்காளர். ஒரே அட்டை, ஒரு வீடு, ஒரு காஸ் கார்டு. இதெல்லாம் நடை முறைக்கு வந்தால்தான், ஒரு குடும்பம், ஒரே ஆட்சி அழியும். நாடு வளம்பெறும். இல்லை என்றால் நாம் அழிவோம், இந்த கும்பலும், குடும்பங்களும் மட்டும் வளரும்.</p>
]]></content:encoded>
		
			</item>
	</channel>
</rss>
